Friday, July 25, 2014

தியாகு கடிதம்

ஐயா வணக்கம்,
அண்மையில் ‘கொற்றவை’ நூலைப் படிக்க ஆரம்பித்தேன்.
நீங்கள் படைத்த படைப்பில் என் விரல்கள் வருடிய முதல் பூ. அருமையான சொல் அமைப்பு, அருமையான பொருள் விளக்கம். மிக அருமை.
ஆனால்,
நூறு பக்கங்கள் படிக்கும் முன் பல கேள்விகள். கேள்விகளுடன் தொடர மனம் ஏனோ முன்வரவில்லை. என் கேள்விகள்,
நூலில் நீங்கள் கூறியவை அனைத்தும் உண்மையா? தொல்குடி?சிவன்?குமரிக்கோடு?தமிழ் பிறந்த விதம்? பாண்டியர்கள்? மதுரை?தொல்காப்பியர்?…
இப்படி நீங்கள் விளக்கிய ஒவ்வொரு விளக்கத்திற்கும் ஒரே கேள்வி தான், உண்மையா? உண்மையா? உண்மையா?
உங்கள் மறு மொழி தேடிக் காத்திருக்கும் புதிய விசிறி,
தியாகு.
அன்புள்ள தியாகு
உண்மை என்றால் என்ன? தகவலுண்மை ஒன்று உண்டு. தத்துவ உண்மை உண்டு. புனைவு உண்மை உண்டு. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சாராம்சத்தைக் காட்டுகின்றன. சிலசமயம் அவை ஒன்றுக்கொன்று முரண்படவும் செய்யலாம்
கொற்றவை பேசுவதெல்லாம் புனைவு உண்மைகளையே- தகவலுண்மைகளை அல்ல. புனைவுக்கு அடிப்படைத்தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன
ஜெ

No comments:

Post a Comment