Friday, July 25, 2014

கணேஷ்பாபு கடிதம்

உயர்திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
கடந்த சில மாதங்களாக தங்களின் “கொற்றவை” நாவலை தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறேன். உடுமலை.காம் இணையதளத்திலும் விசாரித்தேன். அவர்கள் நாவல் எங்கும் கிடைக்க பெறவில்லை என்றும், மீண்டும் அச்சில் ஏற்றுவதற்கு முயற்சி நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார்கள். தயவு செய்து நாவல் எப்போது கடைகளில் கிடைக்கும் என்ற தகவலை தங்கள் இணையதளத்தில் வெளியிடவும்.
என்னை எப்போதும் கவர்வது தங்கள் படைப்பில் தெறிக்கும் உக்கிரம் மற்றும் மொழி ஆளுமை. ‘லங்கா தகனத்தில்’ ஆரம்பித்து ‘மத்தகம்’ வரை உங்கள் மொழியில் தெறிக்கும் உக்கிரம் வாசிக்கையில் இனம்புரியா அச்சத்தையும் இன்பத்தையும் ஒருசேர அளிக்கிறது. கொற்றவையிலும் இச்சுவை பெரிதும் காணப்படும் என்று நம்புகிறேன். வாசிக்க ஆர்வமாய் உள்ளேன்.
மிக்க அன்புடன்,
கணேஷ் பாபு
சிங்கப்பூர்
அன்புள்ள கணேஷ்
கொற்றவை படிமங்களும் உருவகங்களும் கொண்ட நடை கொண்டது. என்னுடைய புனைதிறனின் சிறப்பம்சம் அதுவே என்பதே என் எண்ணம். அதன் உச்சம் கொற்றவை.
தூய தமிழில், சிலப்பதிகாரத்தில் உள்ள வடமொழிச்சொற்களைக்கூட களைந்து, உருவாக்கப்பட்ட கவித்துவ நாவல், ஆகவே புதுக்காப்பியம், அது
கொற்றவை இப்போது விற்பனையில் இல்லை. தீர்ந்துவிட்டது. தமிழினி வெளியீடாக வரும் நவம்பரில் வெளிவரும். அந்த தகவலை இணையதளத்தில் தெரிவிக்கிறேன்
ஜெ
ஜெயமோகன்

No comments:

Post a Comment