Friday, July 25, 2014

பாரதி சிவசுப்ரமனியம் -கடிதம்

அன்புள்ள ஜெ மோ அவர்களுக்கு ,
கொற்றவை யின் முலைக்குறை காதை யோடு நிற்கிறேன்.
கதையில் என்னால் புரிந்து கொள்ள முடியாத பல இடங்கள் இருந்தும் ,இதுவரை வந்த காரணம் கதை மாந்தர்கள்…well defined characters
அடி சமம் இலாத பாத்திரத்தின் நீர் போல எபோதும் தளும்பிக் கொண்டே இருக்கும் மனதோடு கோவலன்.
நான் என்றைக்குமே மனிதர்களில் சந்திக்க விரும்பாத முதிர்ச்சியுடன் ,தெய்வங்களுக்கே உரிய ஒரு விதமான coldness உடன் கண்ணகி.
இன்னும் மாதவி,நீலி , மகதி,வெண்ணி , வள்ளி என அத்தனை பெண் பாத்திரங்களும் மனதுக்கு மிக நெருக்கமாக இருகிறார்கள்.
குறிப்பாகக் கதை சொல்லும் நீலி …குலக் கதை சொன்னது முடிந்த உடன்…கண்ணகியோடு சேர்ந்து நானும் நீலி சொல்லும் கதையை எதிர்பார்த்துக் காத்திருப்பேன்….
கோவலன் கொலை செய்யப்பட்டபோது எனக்குள் எழுந்தது பெரும் துக்கத்திற்குப் பின் ஒரு வித நிம்மதி …
கதையில் மனித இயல்புகள் மிகுந்த ஒரே பாத்திரம் கோவலன்.அவனது மனக் குழப்பங்களில் இருந்து விடுதலை போல ஒரு மரணம்..
கண்ணகி யோடு சன்னதம் வந்து பின் செல்லும் பெண்களில் ஒருத்தியாய் என்னை உணர்ந்தேன்…மிக சிலிர்ப்பான இடம் அது…
அன்புடன் ,
பாரதி சிவசுப்ரமணியம்.
அன்புள்ள பாரதி
நன்றி.
கொற்றவையில் இருந்து ஆசிரியனாக நான் வெகுதூரம் வெளிவந்துவிட்டேன். அதை என்னுடைய ஆளுமையின் ஆழமான ஒருபகுதியால் அடைந்தது என்று சொல்வேன். ஒருவேளை என் அம்மாவுக்கு மிக நெருக்கமான ஜெயன் எழுதியது அது.
நெடுநாட்களுக்குப்பின் கொற்றவையை நான் வாசித்தபோது எனக்குப்பிடித்தமானதாக இருந்தது அதன் மொழியில் இருந்துகொண்டிருந்த ஒரு மெல்லிய தாளம்தான். தூக்கத்தில் ஏதாவது பாட்டுக் கேட்டால் நாம் கனவுக்குள் நினைக்கும் விஷயங்களுக்கு அந்தப்பாட்டின் தாளம் அமைந்துவிடும், அதைப்போல
ஜெ

No comments:

Post a Comment